திண்டுக்கல் : பள்ளி மாணவர்களுக்கு இடையே மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லூரியில் நடந்தது.
கல்லூரி வளாக இயக்குனர் சந்திரன் துவக்கி வைத்தார். திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த 16 அணிகள் பங்கேற்றன. ஆண்கள் பிரிவில் 17 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் திண்டுக்கல் எம்.எஸ்.பி., பள்ளி அணி முதலிடத்தை பிடித்தது. பெரியகுளம் பி.வி.எம்., பள்ளி 2 ம் இடத்தையும், கொடைக்கானல் புனித பீட்டர்ஸ் பள்ளி அணி 3 ம் இடத்தையும் பிடித்தன. 19 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் திண்டுக்கல் எம். எஸ்.பி., பள்ளி அணி முதலிடம் பிடித்தது. கொடைக்கானல் புனித பீட்டர்ஸ் பள்ளி அணி 2 ம் இடத்தையும், பெரியகுளம் வி.எம்., அரசு பள்ளி 3 ம் இடத்தையும் பிடித்தன. பெண்கள் பிரிவில் 17 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் திண்டுக்கல் அவர்லேடி பள்ளி அணி முதலிடம் பிடித்தது. பெரியகுளம் அரசு பெண்கள் பள்ளி அணி 2 ம் இடத்தையும், பழநி அக்சயா பள்ளி 3 ம் இடத்தையும் பிடித்தன.19 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் பெரியகுளம் அரசு பள்ளி அணி முதலிடத்தை பிடித்தது. திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் பள்ளி 2 ம் இடத்தையும், கம்பம் அரசு பெண்கள் பள்ளி 3 ம் இடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு கல்லூரி முதல்வர் பழனிச்சாமி பரிசுகளை வழங்கினார். போட்டி ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் கோகுல் செய்திருந்தார்.
No comments:
Post a Comment