தாண்டிக்குடி:தாண்டிக்குடி மலைப்பகுதியில் தொடர் மழையால் காபி பழங்கள்
வெடிப்பு ஏற்பட்டு உதிர்ந்து வருகிறது.மலைப்பகுதியில் 30 ஆயிரம் ஏக்கர்
பரப்பில் காபி விவசாயம் செய்யப்படுகிறது. அக்டோபரில் துவங்கும் சீசன் ஜனவரி
வரை நீடிக்கும். தற்போது பருவ மழை தீவிரமடைந்து, கடந்த சில வாரங்களுக்கு
முன் கனமழை கொட்டித் தீர்த்தது. சில தினங்களாக மிதமான மழை மாலை நேரத்தில்
பெய்து வருகிறது. அவ்வப் போது சுட்டெரிக்கும் வெயில், பனிப்பொழிவு, பின்
மழை பெய்வது என சீதோஷ்ண நிலை மாறிய நிலையில் உள்ளது. இதனால் பறிக்கும்
தருவாயில் உள்ள காபி பழங்களில் வெடிப்பு ஏற்பட்டு உதிர்கிறது. இது
விவசாயிகளுக்கு இரட்டிப்பு செலவை ஏற்படுத்துகிறது. உதிர்ந்த பழங்களை
சேகரிப்பதில் கால விரயமும் உண்டாகிறது.

இதுகுறித்து காபி விவசாயிகள் கூறுகையில்: கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து காபி விவசாயம் பாதித்தது. நடப்பாண்டிலும் பூக்கும் தருணத்தில் மழையின்றி மகசூல் பாதியாக குறைந்துள்ளது. காபி விலை ஏற்றம், இறக்கம் காணும் நிலையில் கூலியாட்களின் சம்பளம் அதிகரித்துள்ளது. தொடர் மழையால் பழங்கள் வெடிப்பு ஏற்பட்டு உதிர்கிறது.
இதை சேகரிப்பதற்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. காபி வாரியம் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், என்றனர்.
இதுகுறித்து காபி விவசாயிகள் கூறுகையில்: கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து காபி விவசாயம் பாதித்தது. நடப்பாண்டிலும் பூக்கும் தருணத்தில் மழையின்றி மகசூல் பாதியாக குறைந்துள்ளது. காபி விலை ஏற்றம், இறக்கம் காணும் நிலையில் கூலியாட்களின் சம்பளம் அதிகரித்துள்ளது. தொடர் மழையால் பழங்கள் வெடிப்பு ஏற்பட்டு உதிர்கிறது.
இதை சேகரிப்பதற்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. காபி வாரியம் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், என்றனர்.
No comments:
Post a Comment