கன்னிவாடி:தருமத்துப்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் டெங்கு தடுப்பு
விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் முத்துப்பிள்ளை மகேந்திரன்
தலைமை வகித்தார். துணைத்தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார். செயலர்
இன்னாசி வரவேற்றார். டெங்கு பரவலுக்கான வாய்ப்புகள், அறிகுறி, தடுப்பு,
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதார ஆய்வாளர்கள் சுந்தரம்,
கோபாலகிருஷ்ணன் பேசினர். ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், மகளிர்சுய
உதவிக்குழுவினர், குடிநீர்த்தொட்டி ஆபரேட்டர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment