திண்டுக்கல் : திண்டுக்கல்லில் துவங்க இருக்கும் புத்தக விழாவை
முன்னிட்டு இன்று பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்கும் மாரத்தான்
போட்டி நடத்தப்படுகிறது.
திண்டுக்கல் இலக்கியக் களம் சார்பில் மூன்றாவது புத்தக விழா நவ., 28ல் துவங்கி டிச.,7 வரை டட்லி மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள், பல லட்சம் புத்தகங்கள் இடம் பெறுகின்றன. கலைஞர்களின் உரை, சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்களுடன் சந்திப்பு, மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளக்குபவர்களுக்கு பாராட்டு, நூல் வெளியீடுகள், விவாத மேடைகள், குழந்தைகள் நடனம், ஓவியம், மாறுவேடப்போட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை, கவிதை மற்றும் பேச்சுப்போட்டிகள், வினாடி வினா போட்டிகள் நடக்கிறது.மாரத்தான்: இலக்கியகளம் சார்பில் இன்று மாரத்தான் போட்டி நடக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்கின்றனர். வேடசந்தூர் ரோடு, குஜிலியம்பாறை, திருச்சிரோடு, சிலுவத்தூர் ரோடு, வத்தலக்குண்டு ரோடு, மதுரை ரோடு, பழநிரோடு, நத்தம் ரோட்டில் இருந்து மாரத்தான் ஓட்டங்கள் காலை 7 மணிக்கு ஒரே நேரத்தில் துவங்கி 8 மணிக்கு திண்டுக்கல் டட்லி மேல்நிலைப்பள்ளியில் முடிவடைகிறது.
திண்டுக்கல் இலக்கியக் களம் சார்பில் மூன்றாவது புத்தக விழா நவ., 28ல் துவங்கி டிச.,7 வரை டட்லி மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள், பல லட்சம் புத்தகங்கள் இடம் பெறுகின்றன. கலைஞர்களின் உரை, சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்களுடன் சந்திப்பு, மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளக்குபவர்களுக்கு பாராட்டு, நூல் வெளியீடுகள், விவாத மேடைகள், குழந்தைகள் நடனம், ஓவியம், மாறுவேடப்போட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை, கவிதை மற்றும் பேச்சுப்போட்டிகள், வினாடி வினா போட்டிகள் நடக்கிறது.மாரத்தான்: இலக்கியகளம் சார்பில் இன்று மாரத்தான் போட்டி நடக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்கின்றனர். வேடசந்தூர் ரோடு, குஜிலியம்பாறை, திருச்சிரோடு, சிலுவத்தூர் ரோடு, வத்தலக்குண்டு ரோடு, மதுரை ரோடு, பழநிரோடு, நத்தம் ரோட்டில் இருந்து மாரத்தான் ஓட்டங்கள் காலை 7 மணிக்கு ஒரே நேரத்தில் துவங்கி 8 மணிக்கு திண்டுக்கல் டட்லி மேல்நிலைப்பள்ளியில் முடிவடைகிறது.
No comments:
Post a Comment