திண்டுக்கல் : கல்வித்துறை சார்பில் மண்டல அளவிலான புதிய விளையாட்டு போட்டிகள் திண்டுக்கல்லில் நடந்தது.
முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி துவக்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவர் சுந்தரராஜன், இந்திய சிலம்பம் சம்மேளன உதவித்தலைவர் மோகன் கலந்து கொண்டனர். இதில் ஜிம்னாஸ்டிக், சிலம்பம், வாள் சண்டை போட்டிகள் அச்யுதா பள்ளியிலும், கேரம் போட்டி எஸ்.எம்.பி., பள்ளியிலும் நடந்தன. திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதலிடங்களை பிடித்த மாணவர்கள் சேலத்தில் நவ., 26 ல் நடக்க உள்ள மாநில போட்டிக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.
No comments:
Post a Comment