கொடைக்கானல்,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரியில் கடந்த மாதங்களில் பெய்த மழை காரணமாக தண்ணீர் நிரம்பி வழிகிறது. இருந்த போதிலும் ஏரியின் உட்புறத்தில் நீர்த்தாவரங்கள், ஆகாய தாமரை செடிகள் வளர்ந்து வருகின்றன. இதனால் ஏரியின் அழகு கெடுவதோடு சுகாதார கேடும் ஏற்படுகிறது. எனவே இவற்றை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையொட்டி நேற்று கொடைக்கானல் ஏரியில் வளர்ந்து வரும் நீர்த்தாவரங்களை அகற்றும் பணி தொடங்கியது. இதை நகரசபை தலைவர் எம்.ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) சரவணக்குமார், நகர்நல அலுவலர் ராம்குமார், சுகாதார ஆய்வாளர்கள் தங்கப்பாண்டி, ராஜாமணிகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த பணி தொடர்ந்து நடைபெற்று ஏரியின் சுகாதாரம் காக்கப்படும் என்று நகரசபை தலைவர் ஸ்ரீதர் கூறினார்.
No comments:
Post a Comment