நத்தம் : நெல் பயிர்களை தாக்கும் இலை சுருட்டு புழுக்களை ஆரம்பத்திலேயே அழிப்பதற்கான முயற்சிகளை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டுமென வேளாண்மை துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.நத்தம் பகுதியில் முளையூர், புன்னப்பட்டி, வேலம்பட்டி, செந்துறை, செல்லப்பநாயக்கன்பட்டி, குடகிப்பட்டியில் 60 ஏக்கர் பரப்பளவில் இறவை சாகுபடியாக நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. சாரல் மழை நிலவுவதால் நாற்றுகளில் இலை சுருட்டு புழுக்கள் தொற்றிக்கொண்டு பயிர்களை அழித்து வருகின்றன. இதனால் மகசூல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.வேளாண்மை உதவி இயக்குனர் ரவிபாரதி கூறுகையில், ""விளைநிலங்களில் தேங்கியுள்ள தண்ணீரை முதலில் வெளியேற்ற வேண்டும். பின்னர் இரண்டு லிட்டர் தண்ணீரில் 2 மி.லி., மோனோகுரோட்டோபாஸ் மருந்தினை கலந்து கைத்தெளிப்பானால் நெல் பயிரில் தெளிக்க வேண்டும். இதன் மூலம் இலை சுருட்டு புழுக்களை அழிக்கலாம்,''என்றார்.
Monday, 17 November 2014
நெல் பயிர்களை தாக்கும் இலை சுருட்டு புழுக்கள்
நத்தம் : நெல் பயிர்களை தாக்கும் இலை சுருட்டு புழுக்களை ஆரம்பத்திலேயே அழிப்பதற்கான முயற்சிகளை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டுமென வேளாண்மை துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.நத்தம் பகுதியில் முளையூர், புன்னப்பட்டி, வேலம்பட்டி, செந்துறை, செல்லப்பநாயக்கன்பட்டி, குடகிப்பட்டியில் 60 ஏக்கர் பரப்பளவில் இறவை சாகுபடியாக நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. சாரல் மழை நிலவுவதால் நாற்றுகளில் இலை சுருட்டு புழுக்கள் தொற்றிக்கொண்டு பயிர்களை அழித்து வருகின்றன. இதனால் மகசூல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.வேளாண்மை உதவி இயக்குனர் ரவிபாரதி கூறுகையில், ""விளைநிலங்களில் தேங்கியுள்ள தண்ணீரை முதலில் வெளியேற்ற வேண்டும். பின்னர் இரண்டு லிட்டர் தண்ணீரில் 2 மி.லி., மோனோகுரோட்டோபாஸ் மருந்தினை கலந்து கைத்தெளிப்பானால் நெல் பயிரில் தெளிக்க வேண்டும். இதன் மூலம் இலை சுருட்டு புழுக்களை அழிக்கலாம்,''என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment