Sunday, 17 May 2015

திண்டுக்கல் அருகே நான்கு வழிச்சாலையில் கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிவதால் விபத்து அபாயம்


திண்டுக்கல் அருகே நான்கு வழிச்சாலையில், கான்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
       

      
4 வழிச்சாலை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்ட பிறகு, சாலை போக்குவரத்தில் ஒரு புரட்சி ஏற்பட்டது என்று சொல்லலாம். வாகனங்களின் வேகம் அதிகரித்து, பயண நேரம் கணிசமாக குறைந்திருக்கிறது என்பதை பாராட்டாமல் இருக்க முடியாது. பொதுமக்களுக்கு வரப்பிரசாதமாக இந்த நான்கு வழிச்சாலை அமைந்திருக்கிறது.
தமிழகத்தில் அதிக அளவு 4 வழிச்சாலையை கொண்ட மாவட்டங்களில் திண்டுக்கல் மாவட்டமும் ஒன்றாகும். திண்டுக்கல்லில் இருந்து திருச்சி, சேலம், மதுரை ஆகிய இடங்களுக்கு நான்கு வழிச்சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில், மின்னல் வேகத்தில் வாகனங்கள் சென்று வருகின்றன. அதேநேரத்தில் அவ்வப்போது சிறிய, பெரிய விபத்துகளும் நடந்து வருகிறது.
வெளியே தெரியும் கம்பிகள் எந்தவொரு சாலையாக இருந்தாலும் பராமரிப்பு என்பது அவசியம். இல்லையெனில் அவை பொதுமக்களுக்கு பயன் இல்லாமல் போய் விடும். அப்படியொரு நிலைமை, திண்டுக்கல்–திருச்சி நான்கு வழிச்சாலைக்கு ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இந்த சாலையில் கலெக்டர் அலுவலகம் அருகே, அஞ்சலி ரவுண்டானாவில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. அதன் மேல்பகுதியில் உள்ள சாலை பராமரிப்பு இன்றி பரிதாபமாக காட்சி அளிக்கிறது.
சாலையின் மையப்பகுதியில் போடப்பட்டுள்ள கான்கிரீட் பெயர்ந்து போய் இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதன் காரணமாக, அந்த சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
விபத்து அபாயம் அத்துடன் விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது சிறிய விபத்துகள் அரங்கேறி கொண்டிருக்கின்றன. வேகமாக செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் இறங்கி ஏறுவதால் நிலைதடுமாறி கவிழும் சூழல் நிலவுகிறது.
தற்போது சென்னை, திருச்சியில் இருந்து பழனி மற்றும் கொடைக்கானல் செல்லும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் இந்த சாலையை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். எனவே பெரிய விபத்து ஏற்படும் வரை காத்திருக்காமல், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு நான்கு வழிச்சாலை பராமரிப்பு பணியில் சம்பந்தப்பட்ட துறையினர் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஒட்டன்சத்திரம் பகுதியில் விடிய, விடிய பலத்த மழை வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

        

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால் ஆறு மற்றும் ஓடைகளில் வெள்ளப் பெருககெடுத்து காற்றாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் கிராமங்களில உள்ள வீடுகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. ஒட்டன்சத்திரம் சுற்றுப்புற பகுதிகளான முத்துநாயககன்பட்டி, புலியூர்நத்தம், இடையகோட்டை, கேதையறும்பு, கள்ளிமந்தயம், அத்திககோம்பை, சட்டையப்பனூர், அம்பிளிககை, பெரியகோட்டை உள்ளிட்ட அனைத்து கிராம பகுதிகளிலும் நள்ளிரவு 1 மணி முதல் கனமழை பெய்தது. இதனால் விவசாய நிலங்களில தண்ணீர் தேங்கி உள்ளது. இடையகோட்டை நங்காஞ்சி அணைக்கு முத்துநாயககன்பட்டி, குளிப்பட்டி வழியாக செல்லும் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதேபோல் புலியூர்நத்தம், சட்டையப்பனூர், சாலைப்புது£ர், அத்திககோம்பை ஆகிய பகுதிகளிலும் வீடுகளுககுள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த மககள் இரவில் வீட்டிற்குள் செல்ல முடியாமல் தவித்தனர். பரப்பலாறு அணையில் நேற்று காலை நிலவரப்படி 11.6 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது அதே போல் அணையின் மொத்த கொள்ளளவான 90 அடியில் தற்போது 83.74 அடி தண்ணீர் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக போதிய மழை பெய்யாத நிலையிலும், கடந்த 4 ஆண்டுகளாக கடுமையான வறட்சி நிலவி வந்த நிலையில் இப்போது பெய்துள்ள மழை விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழனி பகுதியில் தொடர்மழையால் அணைகளில் நீர்மட்டம் உயருகிறது


பழனி பகுதிகளில் தொடர் மழை காரணமாக அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
வரதமாநதி அணை
      





தமிழகம் முழுவதும் பெய்து வரும் மழையால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் பழனி, கொடைக்கானல், வத்தலக்குண்டு, நத்தம், கொடைரோடு உள்பட பல்வேறு பகுதிகளிலும் பெய்து வரும் பலத்த மழையால் கண்மாய்கள், குளங்கள் ஓரளவு நிரம்பி உள்ளன.
அத்துடன் பழனி பகுதிகளில் உள்ள அணைகளான வரதமாநதி அணை, பாலாறு–பொருந்தலாறு அணை, குதிரையாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக வரதமாநதி அணை ஓரிரு நாட்களில் நிரம்பும் நிலை ஏற்பட்டு உள்ளது. பழனியிலிருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் அமைந்துள்ள வரதமாநதி அணையின் உயரம் 66.5 அடியாகும்.
தற்போது அணையில் 56.1 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு நீர் வரத்து 51 கன அடியாக இருக்கிறது. அணையில் இருந்து 2 கன அடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
குடிநீர் பற்றாக்குறை அதேபோல திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அணைகளில் மிக பெரியது பழனியை அடுத்துள்ள பாலாறு–பொருந்தலாறு அணை. இதன் உயரம் 65 அடியாகும். இதில் தற்போது 30.97 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ள நிலையில், அணைக்கு நீர் வரத்து 94 கன அடியாக உள்ளது. 12 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பழனியை அடுத்த பாப்பம்பட்டி அருகே அமைந்துள்ளது குதிரையாறு அணை. இதன் உயரம் 80 அடி. இதில் தற்போது 45.8 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. இங்கு நீரின் வரத்து 4 கன அடியாகவும், வெளியேற்றப்படுவது 3 கன அடியாகவும் உள்ளது. இந்த பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் பழனி நகருக்கு குடிநீர் பற்றாக்குறை நீங்கியுள்ளது. இதன் மூலம் அனைத்து வார்டுகளுக்கும் தினசரி குடிநீர் வழங்கலாம் என பழனி நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பழனி–கொடைக்கானல் சாலையில் பாறைகள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு சுற்றுலா பயணிகள் அவதி

பழனி–கொடைக்கானல் சாலையில் பாறைகள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.
தொடர் மழை திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இந்த பலத்த மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள குளங்கள் நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் 27 கிலோ மீட்டர் தூரத்தில் சவரிக்காடு உள்ளது.
இங்கு பெய்த பலத்த மழை காரணமாக பாறைகள் சரிந்து ரோட்டில் விழுந்தன. மேலும் பல்வேறு இடங்களில் பெரிய மரங்களும் முறிந்து விழுந்தன. விடிய, விடிய மழை பெய்ததால் மழைப்பகுதியில் உள்ள மண் அரிக்கப்பட்டு ரோட்டில் மலைபோல் குவிந்தது.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் போக்குவரத்து நேற்று காலை 7 மணி முதல் பாதிக்கப்பட்டது. இதனால் பழனியில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற பயணிகள் பாதிக்கப்பட்டனர். இவர்கள் சென்ற கார்கள் பல கிலோமீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.
தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் பொக்லைன் எந்திரங்களுடன் சென்றனர். பின்னர் சாலைகளில் உள்ள பாறைகளையும், மணல்களையும் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4½ மணி நேரம் இந்த பணிகள் நடந்தது. அதன்பின்னர் போக்குவரத்து சீரானது.
இதேபோன்று பழனியில் இருந்து 17 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வட்டமலை பகுதியிலும் சாலையில் பாறைகள் உருண்டு விழுந்தன. இந்த பகுதியில் உள்ள பாறைகளையும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் அப்புறப்படுத்தினார்கள்.
சீரமைக்கும் பணிகள் இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஜெயபால் கூறுகையில், பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு இருந்தது. இதை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு சரி செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த பகுதியை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மண்சரிந்து விழும் பகுதியை கண்டறிந்து அதை அப்புறப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். மேற்கண்டவாறு அவர் கூறினார்.

திண்டுக்கல் நகரில் விடிய, விடிய கொட்டி தீர்த்த மழை வீடு இடிந்ததில் பெண் காயம்


திண்டுக்கல்லில் விடிய, விடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதில் வீடு இடிந்து விழுந்ததில் பெண் காயம் அடைந்தார்.
விடிய, விடிய மழை சுட்டெரிக்கும் வெயிலின் உச்சக்கட்டமாக கருதப்படுகிற அக்னி நட்சத்திரம் கடந்த 4–ந்தேதி தொடங்கியது. அன்றைய தினத்தில் இருந்து தற்போது வரை திண்டுக்கல் நகர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழையும், சாரல் மழையும் பெய்து வருகிறது. திண்டுக்கல்லில், நேற்று முன்தினம் வழக்கம் போல பலத்த மழை கொட்டி தீர்த்தது.
நள்ளிரவு பெய்ய தொடங்கிய மழை விடிய, விடிய நீடித்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில், சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு மழைநீரும், கழிவுநீரும் கலந்து தெருக்களில் வழிந்தோடின. திண்டுக்கல் திருமலைச்சாமிபுரம் உள்ளிட்ட நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது.
மின்சாரம் துண்டிப்புபலத்த மழை பெய்து கொண்டிருக்கும் போது அவ்வப்போது இடி–மின்னல் இடித்தது. சூறாவளி காற்றும் அடித்தது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உழவு செய்த ஒரு வயல் நாற்று நடுவதற்கு தயாராக இருப்பதை போல, திண்டுக்கல் காந்திமார்க்கெட் சேறும் சகதியுமாக பரிதாபமாக காட்சி அளிக்கிறது.
திண்டுக்கல் நகரில் உள்ள சாலையோர பள்ளங்களில் மழைநீர் நிரம்பி வழிந்தது. நகரில் உள்ள குண்டும், குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். தண்ணீரை பீய்ச்சி அடித்தபடி வாகனங்கள் சென்றன. திண்டுக்கல் அருகே மாங்கரை பிரிவில் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு மரம் சரிந்து விழுந்தது.
                   


மேற்கூரை விழுந்து பெண் காயம் திண்டுக்கல் யானைத்தெப்பம் காந்திஜிபுதுரோட்டை சேர்ந்த நடராஜன், அவரது மனைவி பூமதி (வயது 37) மற்றும் குடும்பத்தினர் நள்ளிரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது ஓடுகளால் வேயப்பட்ட வீட்டின் மேற்கூரை திடீரென சரிந்து விழுந்தது.
பூமதியின் தலையில் சில ஓடுகள் விழுந்தன. இதில் அவர் காயம் அடைந்தார். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார்.
638 மி.மீட்டர் மழை பதிவு திண்டுக்கல் நகர் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) விவரம் வருமாறு:–
திண்டுக்கல்–40.40, கொடைக்கானல்–1.50, நத்தம்–2.20, நிலக்கோட்டை–4.40, பழனி–47, வேடசந்தூர்–84.70, சத்திரப்பட்டி–160, வேடசந்தூர் புகையிலை ஆராய்ச்சி மையம்–74.40, காமாட்சிபுரம்–224 மி.மீட்டரும் மழை பதிவாகி இருக்கிறது. மாவட்டம் முழுவதும் 638.60 மி.மீட்டர் மழையும், சராசரியாக 63.86 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது.

நததம அருகே மலையடிவாரத்தில் பாழடைந்த கிணற்றில் விழுந்த 6 காட்டெருமைகள் 3 எருமைகள் பலியான பரிதாபம்


நத்தம் அருகே மலையடிவாரத்தில் பாழடைந்த கிணற்றில் விழுந்த 6 காட்டெருமைகள் தவறி விழுந்தன. அவற்றில் 3 எருமைகள் பரிதாபமாக இறந்தன.

            

காட்டெருமைகள் திண்டுககல் மாவட்டம நததம அருகே அழகர்மலை அடிவாரத்தில உளளது படடணமபடடி கராமம. இநத மலைப்பகுதியில காடடெருமைகள உள்ளிடட ஏராளமான வனவிலஙகுகள காணப்படுகின்றன. அவை அவ்வப்போது தண்ணீருக்காக கிராம பகுதிகளுக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று மலைப்பகுதியில் இருந்து 6 காட்டெருமைகள் மலையடிவார பகுதிக்கு வந்துள்ளன.
தண்ணீர் தேடி அலைந்த அந்த காட்டெருமைகள் அந்த பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றுக்குள் ஒவ்வொன்றாக தவற விழுநதுள்ளன. இதற்கிடையே நேற்று அநத பகுதியில் விறகு சேகரிப்பதற்காக சென்ற சிலர், துர்நாற்றம் வசுவதை கண்டு கிணற்றுக்குள் பார்த்தனர். அப்போது உள்ளே காட்டெருமைகள் விழுந்து கிடப்பது தெரியவந்தது.
இறந்து கிடந்தன
இதுகுறித்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாவடட வன அதிகாரி சமபத் ஆலோசனையின் பேரில் வேம்பரள வனததுறை அதகார பகவதி மேற்பார்வையில் வன அலுவலர்ள் சமபவ இடததிறகு வந்தனர். அப்போது கிணற்றுக்குள் 3 காட்டெருமைகள் இறந்து கிடப்பதும், மேலும் 3 காட்டெருமைகள் உயிருடன் இருப்பதும் தெரியவந்தது.
உடனே வனத்துறை அதிகாரிகள் நத்தம் தீயணைப்பு படையினரின் உதவியுடன் கிணற்றுக்குள் உயிருடன் இருந்த 3 காட்டெருமைகளை மீட்கும் முயறசியில் ஈடுபட்டனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. பன்னர் பொக்லைன் எநதரம் மூலம் அந்த கிணறறன் பககவாடடு சுவர் இடிக்கப்பட்டு மண் நிரப்பப்பட்டது.
மலைப்பகுதிக்குள் சென்றன இதையடுத்து அந்த காட்டெருமைகள மண்குவியல வழயாக கிணற்றுக்குள் இருந்து வெளியே வந்தன. பின்னர் அவை அங்கிருந்து துள்ளி குதித்து மலைபபகுதிககுள் சென்றன. பின்னர் கிணற்றுக்குள் இறநது கிடநத 3 காடடெருமைகளின் உடல்களையும் வனத்துறையினர் மீட்டனர். அவை அரசு கால்நடை மருததுவரால் பரசோதனை செயயபபடடு அந்த பகுதியிலேயே புதைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறதது அபபகுதியை சேர்ந்த விவசாயி முருகேசன் என்பவர் கூறும்போது, ‘‘அழகர்மலை பகுதியில் காடடெருமைகளின் நடமாடடம அதிகமாக உளளது. அவற்றுக்கு தேவையான தணணர் மலைப்பகுதியில் கிடைப்பதில்லை. இதனால் அவை அடிக்கடி ஊருக்குள் வலம் வருகின்றன. எனவே மாவட்ட நர்வாகம் வவிலங்குகளுக்கு தேவையான தண்ணீரை மலைப்பகுதியில் தடுபபணைகள கடடி தேகக வைக்க நடவடிக்கை எடுக்க வேணடும’’ எனறார்.

ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட்டில் பயணிகள் நிழற்கூரை அவசியம்

ஒட்டன்சத்திரம், :மூன்று ரோடுகளின் சந்திப்பு பகுதியான ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட்
பகுதியில் நிழற்கூரை வசதி இல்லாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் பஸ் நிறுத்தமானது, திண்டுக்கல் ரோடு, பழநி ரோடு மற்றும் வேடசந்தூர் ரோடு ஆகியவை சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இதனை சுற்றி அண்ணாநகர், கே.கே.நகர் மற்றும் அத்திக்கோம்பை ஊராட்சிகள் அமைந்துள்ளன. வேலை நிமித்தம் காரணமாக தினந்தோறும் ஏராளமான பயணிகள் இங்கிருந்து வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். இப்பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்ட பின்னர் பல பஸ்ஸ்டாப்புகள் காணாமல் போயின. இதனால் திண்டுக்கல், மதுரை செல்லும் பயணிகள் ஆபத்தான இடத்தில் நின்று பஸ்களில் ஏறிச் செல்கின்றனர். இதே போல் பழநி மார்க்கமாக செல்வதற்கான பஸ்ஸ்டாப்பும் எது என்று தெரியவில்லை. இதனால் பயணிகளைப் போலவே, பஸ் டிரைவர்களும் குழப்பமடைந்து நினைத்த இடத்தில் பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கி விடுகின்றனர்.
நிழற்கூரை இல்லாததால் மழை மற்றும் வெயில் காலங்களில் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இப்பகுதியில் நிரந்தரமான பஸ்ஸ்டாப்பை நிழற்கூரை வசதியுடன் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பு.

ஆக்கிரமிப்பு கோயில்கள் பற்றி கணக்கெடுப்பு

திண்டுக்கல், :மாநகராட்சி நகரமைப்பு ஆய்வாளர்கள் மூலம், திண்டுக்கல் நகரில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ஆலயங்கள், கோயில்கள் குறித்த கணக்கெடுப்பு நடந்தது.
திண்டுக்கல் நகரில், "ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோயில்கள், ஆலயங்கள் குறித்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கும் படி, மாநகராட்சி கமிஷனர் ராஜன் உத்தரவிட்டார். இதனையடுத்து அவற்றை கணக்கெடுக்கும் பணியில் நகரமைப்பு ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நகரமைப்பு அலுவலர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ""ஆக்கிரமிப்பில் உள்ள ஆலயங்கள், கோயில்களை அகற்றுவதற்கு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி ஏற்கனவே கணக்கிடப்பட்டது குறித்த மறு ஆய்வுதான் தற்போது நடைபெறுகிறது. இதில் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம், என்றார்.

கருத்தரங்கம்

நத்தம், :நத்தத்தில் வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பை அச்சுறுத்தும் தொற்றுநோய் கிருமிகள், உணவு கையாள்பவர்களின் பங்கு குறித்த கருத்தரங்கு நடந்தது.
இதில் உணவு பாதுகாப்பு, உணவு கையாள்பவர்கள் நோய் தொற்று இல்லாததை உறுதி செய்தல் குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சாம் இளங்கோ பேசினார்.
நத்தம் வணிகர்கள் சங்க தலைவர் ஷேக்ஒலி உள்ளிட்ட வணிக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அரசன்கொடை-தாண்டிக்குடி ரோடு: வனஅலுவலர் ஆய்வு

தாண்டிக்குடி, :பத்து ஆண்டுகளுக்கு மேலாக அரசன்கொடை பகுதியினர் ரோடு வசதி கேட்டு வருகின்றனர். தற்போது கொடைக்கானல் ஒன்றியம் மூலம் ரூ.93 லட்சத்தில் புறநகர் பகுதியில் ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது. வனப்பகுதியில் எஞ்சியுள்ள இரண்டரை கி.மீ., ரோடு அமைந்தால் மட்டுமே இவர்களின் கோரிக்கை சாத்தியமாகும். திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் சம்பத், அரசன்கொடை பகுதியினரை சந்தித்து வனப்பகுதியில் ரோடு அமையவுள்ள பகுதி குறித்து ஆய்வு செய்தார். வனத்துறையினரிடம் அளவீடு செய்து தரும்படி உத்தரவிட்டார். சம்பத் கூறுகையில், ""அரசன்கொடை ரோடுக்கு மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பெருங்கானல் பகுதி விவசாயிகளின் ரோடு அமைக்கும் கோரிக்கை குறித்தும் ஆய்வு செய்துள்ளோம்,'' என்றார்.

நத்தத்தில் கருணை கிழங்கு சாகுபடி தீவிரம்

நத்தம், :நத்தம் பகுதியில் கருணை கிழங்கு சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி
வருகின்றனர். நத்தம் சுற்றுவட்டார பகுதிகளான காசம்பட்டி, கவரப்பட்டி, புதுக்கோட்டை, வத்திப்பட்டி, லிங்கவாடி கிராமப் பகுதிகளில் அதிக அளவில் கருணை கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. சாதாரணமாக மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும் கிழங்குகளில் நன்கு முளை விட்டுள்ள விதைகளை தேர்ந்தெடுத்து நடவு செய்யலாம். சொந்த நிலத்தில் விளையும் கிழங்குகளிலும் விதை எடுக்கலாம். நடவு செய்ததிலிருந்து ஏழு முதல் எட்டு மாதங்களில் விளைந்து விடும். இரண்டு வாரங்களில் மூன்று முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பாத்திகளில் அதிகம் தண்ணீர் தேங்கி நிற்காமல் இருந்தால் கிழங்கு அழுகாமல் இருக்கும். கருணை கிழங்கு செடியில் நோய் தாக்குதல் குறைவு. நன்கு பராமரித்தால் ஒரு செடியில் இருந்து அதிக பட்சமாக ஒரு கிலோ வரை விளைச்சல் பெற முடியும்.
இப்பகுதியில் விளையும் கிழங்குகள் மதுரை உள்ளிட்ட மார்க்கெட்டில் விற்கப்படுகிறது. தற்போது வரத்து குறைவால் நல்ல விலை கிடைக்கிறது. விலை கிடைப்பதால் விவிசாயிகள் கருணை கிழங்கு சாகுபடியில் ஆர்வர் காட்டி வருகின்றனர். விவசாயி பழனிச்சாமி கூறியதாவது,""இருபது சென்டில் சாகுபடி செய்துள்ளேன். தற்போது கிலோ ரூ.60 க்கு விற்பனையாகிறது. இதனால் நல்ல லாபம் கிடைக்கிறது. வரத்து கூடுதல் காலங்களில் விலை குறையவும் வாய்ப்புள்ளது'' என கூறினார்.

கொடைக்கானல் கோடை விழா மலர் கண்காட்சியுடன் துவங்கியது: அமைச்சர்கள் பங்கேற்பு

கொடைக்கானல்: கொடைக்கானலில் 54 வது மலர் கண்காட்சி விழா மற்றும் கோடைவிழா நேற்று மழையோடு துவங்கியது. விழாவிற்கு திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் தலைமை வகித்தார். கோடைவிழாவை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் துவக்கி வைத்தார். இதில் அமைச்சர்கள் சண்முகநாதன், வைத்திலிங்கம் பங்கேற்றனர். விழாவில் தையல் மெஷின், Œலவை பெட்டி, மிக்சி வழங்கப்பட்டன. உதயகுமார் எம்.பி., வேணுகோபாலு எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் ஸ்ரீதர், கமிஷனர் காளிமுத்து, அ.தி.மு.க., மாவட்ட பிரதிநிதி வீரராஜேஷ் கண்ணா, மேல்மலை ஜெ.,பேரவை செயலாளர் சிவாஜி, ஒன்றிய செயலாளர் முருகன், வில்பட்டி ஊராட்சி தலைவர் மலைச்சாமி, நகர ஜெ., பேரவை துணை செயலாளர் செல்வம், மீனவர் அணி செயலாளர் ஆரோக்யசாமி, இளைஞரணி துணை செயலாளர் பரமசிவம் கலந்து கொண்டனர். அதிகாரிகள்: மாவட்ட வருவாய் அலுவலர் நாகேந்திரன், ஆர்.டி.ஓ. சுரேஷ், வன அலுவலர்கள் சம்பத், வெங்கடேசன், தோட்டக்கலை துணை இயக்குனர் பாண்டி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாண்டியராஜன், சுற்றுலா அலுவலர் குணசேகரன் பங்கேற்றனர்.

கனமழை: ரோட்டில் குவிந்த செம்மண்ணால் பாதிப்பு

தாண்டிக்குடி, :தாண்டிக்குடி-அரசன்கொடை புறவழிச்சாலைக்கு கொட்டப்பட்ட செம்மண் கனமழையால் மெயின் ரோட்டில் குவிந்து வாகனங்களுக்கு இடையூறானது. தாண்டிக்குடி அருகே அரசன்கொடை புறவழிச்சாலையில் செம்மண் கொட்டப்பட்டுள்ளது. இப்பகுதியில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான ரோடு பகுதியில் கொட்டப்பட்ட செம்மண் அரிக்கப்பட்டு, தாண்டிக்குடி-வத்தலக்குண்டு மெயின் ரோட்டில் குவிந்தது. இப்பகுதி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதில் சிக்கும் வாகனங்கள் தடுமாறி கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்குகின்றன. மெயின் ரோட்டில் குவிந்துள்ள சகதியை அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், :விவசாயிகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில், நதிகளை மத்திய அரசு நேரடி பார்வையில் கண்காணிக்க வலியுறுத்தி திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இயக்கத் தலைவர் தர்மராஜ் தலைமை வகித்தார். மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகி அசோகன் முன்னிலை வகித்தார். தேசிய நீர்வழிச்சாலை இயக்க மாவட்ட தலைவர் போஸ், ஆத்தூர் ஒன்றிய தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பாத்திமா ராஜரத்தினம் பங்கேற்றனர். ஆந்திராவில் 20 தொழிலாளர்களை சுட்டுக் கொன்றவர்களை தண்டிக்க வேண்டும். கொடைக்கானல் வனசரணாலய அறிவிப்பை திரும்ப பெற வேண்டும். மத்திய அரசின் நில
சீர்திருத்த திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு போன்றவை வலியுறுத்தப்
பட்டன.

இ-சேவை மீண்டும் துவக்கம்

தமிழகம் முழுவதும் முடங்கிய இ-சேவை மையங்கள் மீண்டும் இன்று(மே 17) முதல் இயங்கும் என, அரசு கேபிள்
"டிவி' நிறுவனம் தெரிவித்தது. தமிழகத்தில் 32 கலெக்டர் அலுவலகங்கள், 254 தாலுகா அலுவலகங்களில் இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன. இதில் 18 மையங்கள் "எல்காட்' நிறுவனம் மூலமாகவும், மற்ற மையங்கள் அரசு "கேபிள் டிவி' மூலமாகவும் செயல்படுகின்றன. இம்மையங்களில் வருமானம், ஜாதி, இருப்பிடம், முதல் தலைமுறை பட்டதாரி சான்றுகள் வழங்கப்படுகின்றன. மேலும் பெண் குழந்தை பாதுகாப்பு, திருமண நிதியுதவி போன்ற திட்டங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். சேவைக்கு தகுந்தாற்போல் கட்டணம் வசூலிக்கின்றனர். "சர்வர்' பிரச்னையால் இ-சேவை மையங்கள் ஒருவாரத்திற்கு மேலாக இயங்காமல் முடங்கின. ஜாதி, இருப்பிடம் போன்ற சான்றிதழ்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் விண்ணப்பிக்க முடியாமல் தவித்தனர். தற்போது "சர்வர்' பிரச்னை சரிசெய்யப்பட்டு, இன்று முதல் இ-சேவை மையங்கள் இயங்கும் என, அரசு கேபிள் "டிவி' நிறுவனம் தெரிவித்தது.

DINDIGUL MAP