Wednesday, 19 November 2014

அடர் தீவன பயிற்சி

     
 


தாண்டிக்குடி:தாண்டிக்குடியில் கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு ஆத்மா திட்டத்தின் கீழ் அடர் தீவனம் தயாரிக்கும் பயிற்சி நடந்தது.கொடைக்கானல் வட்டார ஆத்மா திட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலை மை வகித்தார். தாண்டிக்குடி கால்நடை டாக்டர் அருண் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினார். உளுந்தம் பொட்டு, சோளம் மாவு, புண்ணாக்கு, தவிடு, உப்பு, மல்டி விட்டமின் ஆகியவற்றை விகிதாசாரப்படி கலப்பதால் கால்நடைகளுக்கு தேவையான புரோட்டீன், கார்போ ஹைட்ரேட் கிடைப்பதோடு தரமான பால் உற்பத்தி பெருக்க முடியும் என பயிற்சியில் விளக்கப்பட்டது.ஆத்மா திட்ட மேலாளார் கார்த்தி, சிறப்பு அறிஞர் சபரீஸ்வரன், கால்நடை உதவியாளர் ஜெயந்தி, முத்து ஆகியோர் கலந்து கொண்டனர். பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு இலவசமாக அடர் தீவனம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment