Wednesday, 19 November 2014

இலக்கியகளம் சார்பில் கவிதைப்போட்டி வெற்றி மாணவர்களுக்கு புத்தகத்திருவிழாவில் பரிசு

திண்டுக்கல், : திண்டுக்கல்லில் இலக்கியக்களம் சார்பில் 3வது புத்தகத்திருவிழா வரும் 28ம் தேதி துவங்க உள்ளது. இதற்காக மாணவ, மாணவியர்க்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு புத்தகத் திருவிழாவில் பரிசு கள் வழங்கப்பட உள்ளது.
இதில் 6,7,8ம் வகுப்பு மாணவர்களுக்கு இடைநிலைப்பிரிவாகவும், 9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்நிலைப்பிரிவாகவும், 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு மேல்நிலைப்பிரிவாகவும், கல்லூரி மாணவர்களுக்கு தனிப்பிரிவாக வும் போட்டிகள் நடைபெற் றன. இதில் கவிதை போட் டியில் அனைத்து பிரிவுகளிலும் முதல் 3 இடங்களை பெற்றவர்கள் விபரம்:
இடைநிலைப்பிரிவு: சிங்கராயர்(வித்யாபார்த்தி), யாஸ்மின்(ஹோலிகிராஸ்), பவித்ரா(ஸ்ரீசாவித்ரி வித்யாசாலா), உயர்நிலைப்பிரிவு: ஹேமலதா(அண்ணாமலையார்), ஹேமலதா(மீனாட்சி), சத்தியலட்சுமி(எம்விஎம்), மேல்நிலைப்பிரிவு: அங்காளஈஸ்வரி(புனிதவளனார்), ஜோதிவேல்(புனிதமரியன்னை), சாலினி(புனிதவளனார்), கல்லூரிப்பிரிவு: சாருமதி(சக்தி மகளிர் கல்லூரி-ஒட்டன்சத்திரம்), மேரிஜாக்குலின்(அம்மன் கலை, அறிவியல் கல்லூரி), செந்தில்குமார்(பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக்கல்லூரி-பழநி) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களுக்கு புத்தகத்திருவிழாவில் பரிசளிக்கப்பட உள்ளது என்று இலக்கியகள தலைவர் குருவம்மாள், செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் மணிவண்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment