Wednesday, 19 November 2014

பச்சை மிளகாய் விலை குறைவு



                    
 


திண்டுக்கல்:கடந்த இரண்டு வாரங்களாக ரூ.70 க்கு விற்ற பச்சைமிளகாய், இந்த வாரத்தில் விலை குறைந்து கிலோ ரூ.30 விற்பனையானது.திண்டுக்கல் மாவட்டம் முழுவதும், பச்சை மிளகாய் 1204 எக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டிற்கு தினமும் உள்ளூர் வெங்காயம் 1100 கிலோவும், 900 கிலோ பச்சைமிளகாய் திருப்பூரிலிருந்தும் விற்பனைக்கு வருகிறது. வாரத்தின் மூன்று நாட்களில் 2 டன் அளவிற்கு திருப்பூர், உடுமலை பேட்டையிலிருந்து பச்சைமிளகாய் விற்பனைக்கு வருகிறது. கடந்த சில வாரங்களாக வரத்துக்குறைவால் ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.70 விற்பனையானது. தற்போது வரத்து அதிகரித்திருப்பதால் கிலோ ரூ.30 வரை குறைந்தது. காந்தி மார்கெட் வியாபாரி பழனிச்சாமி கூறுகையில் "" செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் உடுமலை சீசன் துவங்கி விடும். அதற்கடுத்த மாதங்களில் திருப்பூரிலிருந்து பச்சைமிளகாய் வரத்து இருக்கும். தொடர்ந்து மழை பெய்ததால் மிளகாய் சிதிலமடையும் அல்லது செடியிலேயே உதிர்ந்து விடும், வரத்து இருக்காது. இந்த நேரத்தில் விலை உயரும். தற்போது திருப்பூர், உடுமலை பச்சைமிளகாய் வரத்து அதிகரித்திருப்பதால் விலை குறைந்துள்ளது'' என்றார்.

No comments:

Post a Comment