குஜிலியம்பாறை:ஆர்.வெள்ளோடு ஊராட்சி பகுதியில், விவசாய மின் மோட்டார்கள்
அடிக்கடி பழுதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.சத்திரப்பட்டி துணை மின்
நிலையத்தில் இருந்து, ஆர்.வெள்ளோடு, திருக்கூர்ணம் ஊராட்சி பகுதிகளுக்கு
ஒரு மின் லைன் விநியோகமும், கூம்பூர் ஊராட்சி பாம்புலுபட்டி வரை ஒரு மின்
லைன் விநியோகமும் செல்கிறது. இதில், ஆர்.வெள்ளோடு, திருக்கூர்ணம் ஊராட்சி
பகுதிகளுக்கு செல்லும் லைனில் மின்சாரத்தை சீராக்கும் "பிரேக்கர் பாக்ஸ்'
(வேகத்தடுப்பு பெட்டி) பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி மின் மின்
மோட்டார்கள் ஓட்டம் தடைபடுகிறது. பல மோட்டார்கள் "ரிவேர்ஸ்சில்'
சுற்றுகின்றன. மின் மோட்டார்கள் பழுதாகும் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
திருக்கூர்ணம் ஊராட்சி தலைவர் ராஜகோபால் கூறியதாவது; "பிரேக்கர் பாக்ஸ்'
பழுதாகி பத்து நாட்களாகிறது. அதை சரி செய்ய காலதாமதம் செய்கின்றனர்.
இதனால், பாம்புலுபட்டி பீடரில் மாட்டி, திருக்கூர்ணம், பாம்புலுபட்டி
இரண்டுக்கும் ஒரே இணைப்பு கொடுத்துள்ளனர். இதனால், அடிக்கடி மின்
மோட்டார்கள் பழுதாகின்றன. மின் விநியோகத்தை சீராக்க, மின் துறையினர் முன்வர
வேண்டும்.
No comments:
Post a Comment