Wednesday, 19 November 2014

இன்று முதல் திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் சேவை மையம்

திண்டுக்கல், : நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மாநகராட்சியில் மக்கள் சேவை மையம் இன்று(19ம் தேதி) முதல் துவங்க உள்ளது. மேயர் மருதராஜ் துவக்கி வைக்கிறார்.
மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், வர்த்தக உரிமங்கள், பாதாள சாக்கடை குழாய் இணைப்புகள், குடிநீர் குழாய் இணைப்புகள், தொழில்வரி, காலிமனைவரி, சொத்துவரி விதித்தல், கட்டிட அனுமதி மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு விரைவில் கிடைக்கும் வகையில் இம்மையம் செயல்படும். ஒவ்வொரு புதன் அன்றும் காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை மனுக்கள், விண்ணப்பங்கள் பெறப்பட்டு தீர்வு காணப்படும்.
எனவே இம்மையத்தை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாநகராட்சி ஆணையர் ராஜன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment