Wednesday, 19 November 2014

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பேட்டரி கார் இயக்க வர்த்தகர்கள் கோரிக்கை

திண்டுக்கல், : திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்காக பேட்டரி கார்களை இயக்க வேண்டும் என்று மாவட்ட தொழில் வர்த்தகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் கிருபாகரன், செயலாளர் மங்களம்அழகு, பொருளாளர் முகமதுகனி ஆகியோர் ரயில்வே பொதுமேலாளரிடம் அளித்துள்ள மனு விபரம்: திண்டுக்கல் ரயில்நிலையத்தில் தொடுதிரை செயல்படாமல் உள்ளது. சுரங்கப்பாதையில் துர்நாற்றம் மற்றும் மழைநீர் மேற்கூரையில் இருந்து ஒழுகுகிறது. ரயில்பெட்டி நிற்கும் இடத்திற்கான டிஜிட்டல் பலகை வேலை செய்யவில்லை.
முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி கார்களை இயக்க வேண் டும். சென்னை, பெங்களூருவிற்கு முன்பதிவு இல்லாத புதிய ரயில்களை இயக்க வேண்டும். ரயில்வே குட் செட்டை அங்குநகர் பகுதி க்கு மாற்ற வேண்டும். ரயில்நிலையத்தில் விசார ணை கவுன்ட்டர் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment