திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் மல்லிகையில் வெள்ளைக்கொசு, நூல்புழு தாக்குதல் ஏற்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில் செம்பட்டி, நிலக்கோட்டை, ஏ.வெள்ளோடு, வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம் உட்பட பல கிராமங்களில் மல்லிகை சாகுபடி நடக்கிறது. கடந்த வாரம் வரை மழை பெய்ததால் விளைச்சல் அதிகரித்துள்ளது. தற்போது அதிகளவு பனிப் பொழிவு காணப்படுகிறது. மல்லிகைப்பூவில் வெள்ளைக்கொசு, நூல்புழு தாக்குதல் அதிகம் உள்ளது. தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் எதுவும் வழங்கவில்லை.எனவே வெள்ளைக்கொசு தாக்குதலில் இருந்து செடிகளை காக்க அசிட்டியா பிரைடு, நூல்புழு தாக்குதலில் இருந்து செடிகளையும், பூக்களையும் பாதுகாக்க புரோபைபாஸ், கார்டா ஹைட்ரோகுளோரைடு வாங்கி வாரம் இருமுறை விவசாயிகளே தெளித்து வருகின்றனர். தோட்டக்கலைத்துறையினர் களப்பணிக்கு ஆய்வுக்கு சென்று நேரடியாக ஆலோசனை வழங்கினால் மட்டுமே அது முறையானதாக இருக்கும். மாவட்ட நிர்வாகம் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
Saturday, 10 January 2015
மல்லிகையில் வெள்ளைக்கொசுநூல்புழு தாக்குதலால் பாதிப்பு
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் மல்லிகையில் வெள்ளைக்கொசு, நூல்புழு தாக்குதல் ஏற்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில் செம்பட்டி, நிலக்கோட்டை, ஏ.வெள்ளோடு, வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம் உட்பட பல கிராமங்களில் மல்லிகை சாகுபடி நடக்கிறது. கடந்த வாரம் வரை மழை பெய்ததால் விளைச்சல் அதிகரித்துள்ளது. தற்போது அதிகளவு பனிப் பொழிவு காணப்படுகிறது. மல்லிகைப்பூவில் வெள்ளைக்கொசு, நூல்புழு தாக்குதல் அதிகம் உள்ளது. தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் எதுவும் வழங்கவில்லை.எனவே வெள்ளைக்கொசு தாக்குதலில் இருந்து செடிகளை காக்க அசிட்டியா பிரைடு, நூல்புழு தாக்குதலில் இருந்து செடிகளையும், பூக்களையும் பாதுகாக்க புரோபைபாஸ், கார்டா ஹைட்ரோகுளோரைடு வாங்கி வாரம் இருமுறை விவசாயிகளே தெளித்து வருகின்றனர். தோட்டக்கலைத்துறையினர் களப்பணிக்கு ஆய்வுக்கு சென்று நேரடியாக ஆலோசனை வழங்கினால் மட்டுமே அது முறையானதாக இருக்கும். மாவட்ட நிர்வாகம் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment