திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் 567 குழந்தை தொழிலாளர்களுக்கு சிறப்பு மையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக, கலெக்டர் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.
குழந்தை தொழிலாளர்கள் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் செயற்குழு கூட்டம், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் நாகேந்திரன் முன்னிலை வகித்தார். அப்போது கலெக்டர் ஹரிகரன் பேசியதாவது:–
திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 567 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும், 17 சிறப்பு பயிற்சி மையங்களில் கல்வி மற்றும் தொழிற்கல்வி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாதந்தோறும் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
அதேபோல் கடைகள், உணவு விடுதிகள் மற்றும் தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் யாராவது இருக்கிறார்களா? என்று அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும். சிறப்பு மையங்களில் பயிற்சி பெற்ற 3 பேர் தற்போது பிளஸ்–2, கல்லூரி, தொழிற்நுட்ப கல்லூரியில் பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி உபகரணங்கள் எனவே, சிறப்பு பயிற்சி மையங்களுக்கு தேவையான கல்வி மற்றும் தொழிற்கல்வி உபகரணங்களை வாங்கி அதிகாரிகள் வழங்க வேண்டும். அதோடு மாவட்டம் முழுவதும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களின் விவரங்களை பெறும் வகையில், அவசர உதவி தொலைபேசி எண்கள், முகவரி கொண்ட ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் ஹரிகரன் பேசினார்.
இந்த கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) சீத்தாராமன், குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் அறிவழகன், தொழிலாளர் ஆய்வு அலுவலர் முருகன், தொழிற்சாலை ஆய்வு அலுவலர் சுதாராஜன், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் சுப்பிரமணி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சத்தியநாராயணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 567 குழந்தை தொழிலாளர்களுக்கு சிறப்பு மையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக, கலெக்டர் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.
குழந்தை தொழிலாளர்கள் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் செயற்குழு கூட்டம், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் நாகேந்திரன் முன்னிலை வகித்தார். அப்போது கலெக்டர் ஹரிகரன் பேசியதாவது:–
திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 567 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும், 17 சிறப்பு பயிற்சி மையங்களில் கல்வி மற்றும் தொழிற்கல்வி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாதந்தோறும் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
அதேபோல் கடைகள், உணவு விடுதிகள் மற்றும் தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் யாராவது இருக்கிறார்களா? என்று அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும். சிறப்பு மையங்களில் பயிற்சி பெற்ற 3 பேர் தற்போது பிளஸ்–2, கல்லூரி, தொழிற்நுட்ப கல்லூரியில் பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி உபகரணங்கள் எனவே, சிறப்பு பயிற்சி மையங்களுக்கு தேவையான கல்வி மற்றும் தொழிற்கல்வி உபகரணங்களை வாங்கி அதிகாரிகள் வழங்க வேண்டும். அதோடு மாவட்டம் முழுவதும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களின் விவரங்களை பெறும் வகையில், அவசர உதவி தொலைபேசி எண்கள், முகவரி கொண்ட ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் ஹரிகரன் பேசினார்.
இந்த கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) சீத்தாராமன், குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் அறிவழகன், தொழிலாளர் ஆய்வு அலுவலர் முருகன், தொழிற்சாலை ஆய்வு அலுவலர் சுதாராஜன், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் சுப்பிரமணி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சத்தியநாராயணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment