Saturday, 10 January 2015

அரசு மருத்துவமனைக்கு ரூ.38 லட்சத்தில் நவீன இயந்திரம்

திண்டுக்கல், : அரசு மருத்துவமனைக்கு ரூ.38 லட்சத்தில் ரத்த உட்கூறு களை பிரிக்கும் நவீன இயந்திரம் வரவழைக்கப்பட்டு உள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதையடுத்து அரசு மருத்துவமனை நவீன மயமாக்கப் பட்டு வருகிறது. திண்டுக்கல், வேடசந்தூர் நத்தம், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இங்கு உள்நோயாளிகளாக 450 பேரும், வெளிநோயாளிகளாக 800க்கும் மேற்பட்ட பேரும் வந்து செல்கின்றனர்.
மேலும் நாள்தோறும் 15 பிரசவங்கள் நடைபெற்று வருகின்றன. அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் ரத்த வங்கியில், தற்போது ரூ.38 லட்சம் மதிப்பில் ரத்த உட்கூறுகள் பிரிக்கும் நவீன இயந்திரம் வரவழைக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் ரத்தத்தில் உள்ள தட்டை அணுக்கள், சிவப்பு அணுக்கள், பிளாஸ்மா, கிர்யோ பிரிசிப்டேட் உள்ளிட்டவைகளை பிரித்து பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு  தேவையானவை மட்டும் செலுத்த முடியும்.
இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் அன்புச்செல்வன் (பொ றுப்பு) கூறுகையில், நவீன இயந்திரம் மூலம் பிரசவ நோயாளிகளுக்கும், ரத்த சோகை, ரத்தம் உறைய வை க்க, புரதசத்து குறைபாடு உள்ளவர்களுக்கு ரத்தத்தில் தேவைப்படும் அணுக்கள் மட்டும் பிரித்து வழங்கலாம்.
இதனால் 1 யூனிட் ரத்தம் 3 வெவ்வேறு நோ யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கலாம்.
மேலும் திண்டுக்கல் அரசு ரத்த வங்கியில் நாளு க்கு நாள் ரத்தத்தின் தேவை அதிகரிப்பதால், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ரத்ததானம் வழங்க முன்வர வேண்டும்.
பிரசவ நோயளிகளுக்கு அதிகளவு ரத்தம் தேவைப்படுகிறது. தங் களின் பிறந்தநாள், திருமண நாள், விஷேச தினங்களில் ரத்தம்தானம் வழங்க அனைவரும் முன்வர வேண்டும் என் றார்.

No comments:

Post a Comment