Saturday, 10 January 2015

பனி தாக்குதலில் இருந்து மலர செடிகளை பாதுகாக்க ஏற்பாடு

    


கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பனி தாக்குதலில் இருந்து மலர் செடிகளை பாதுகாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மலர் கண்காட்சி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மே மாதம் மலர் கண்காட்சி நடைபெறும். இதையொட்டி பல்வேறு வகையான 3 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன. தற்போது கொடைக்கானல் பகுதியில் குளிர் சீசன் நிலவி வருகிறது. இதனால் இரவு வேளையில் பனிப்பொழிவு ஏற்படுகிறது.

எனவே மலர் செடிகள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பனியின் தாக்கத்தில் இருந்து மலர் செடிகளை பாதுகாக்க தோட்டக்கலைத் துறையினர் செடிகளின் மீது நிழல் வலைகளை அமைத்து பாதுகாத்து வருகிறார்கள். இதற்காக மலர் செடிகளின் மேல் பந்தல் அமைக்கப்பட்டு அதன்மீது வலைகள் போர்த்தப்பட்டுள்ளன.

நிழல் வலைகள்

இது குறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறும்போது, வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு 3 லட்சம் மலர் செடிகள் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு நடவு செய்யப்பட்டுள்ளன. இவைகள் வருகிற ஏப்ரல் மாதம் பூக்க தொடங்கி ஜூன் மாதம் வரை இருக்கும். இதனை பாதுகாக்க நிழல் வலைகள் அமைத்துள்ளோம். தற்போது வரை நீர்ப்பனியே நிலவி வருகிறது. உறைபனி நிலவினால் மலர் செடிகள் கருகும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர். 

No comments:

Post a Comment