Saturday, 10 January 2015

"டெங்கு' பாதிப்பு வீடுகளில் கலெக்டர் ஆய்வு

வத்தலக்குண்டு:வத்தலக்குண்டில் "டெங்கு' காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் வீடுகளுக்குச் சென்று பார்வையிட்ட கலெக்டர் ஹரிஹரன், சுகாதாரத்துறையினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொண்டார். வத்தலக்குண்டில் 2 மாதங்களில் "டெங்கு'வால் 16 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டதால் பாதிப்பு குறைந்து உள்ளது. இதனையடுத்து சுகாதாரத்துறையினர் வீடு, வீடாக சென்று கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.இப்பகுதிகளை நேற்று கலெக்டர் ஹரிஹரன் ஆய்வு செய்தார். வ.உ.சி., நகரில் "டெங்கு'வால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்குச் சென்று பார்வையிட்டார். அவரிடம் பொதுமக்கள், "கழிவுநீர் வடிகால் வசதியில்லை, பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகத்தில் பாரபட்சம் காட்டுகிறது என, புகார் செய்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து குறைகளை உடனடியாக சரி செய்ய உத்தரவிட்ட கலெக்டர், ""துப்புரவு பணியாளர்களுக்கு ஒத்துழைப்ப தரவேண்டும். அப்போதுதான் "டெங்கு'வை முழுமையாக ஒழிக்க முடியும்'' என்றார்.

No comments:

Post a Comment