பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள்–ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், திண்டுக்கல்லில் பழனி ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு கூட்டமைப்பின் திண்டுக்கல் நகர தலைவர் விஜயரெங்கன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ஜோதிநாதன் வரவேற்றார்.
மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உதயசூரியன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். மதுரை மாவட்ட தலைவர் சிவகுருநாதன், பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சங்க மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். எல்.ஐ.சி.கோட்ட துணை செயலாளர் வாஞ்சிநாதன் வாழ்த்தி பேசினார்.
பல்வேறு கோரிக்கைகள் தர்ணா போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் வருமாறு:–
காலிப்பணியிடங்களில் புதிதாக ஆட்களை நியமனம் செய்ய வேண்டும். தனியாக இயக்கப்படும் பி.பி.என்.எல். ( இணையதள சேவை) நிறுவனத்தை பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் இணைக்கப்பட வேண்டும். வளர்ச்சி, விரிவாக்கத்துக்கு தேவையான கருவிகள், கேபிள்கள், ஆப்டிக் பைபர் ஆகியவற்றை வழங்க வேண்டும்.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ஸ்பெக்டரம் அலைவரிசை ஒதுக்கப்பட வேண்டும். 4 ஜி சேவையை தாமதமின்றி அனுமதிக்க வேண்டும். மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை அலுவலகங்களில் பி.எஸ்.என்.எல். பயன்பாட்டை கட்டாயமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
No comments:
Post a Comment