Saturday, 10 January 2015

உணவு உற்பத்தியை அதிகரிக்கும் களப்பணியில் 2,078 அலுவலர்கள் :சாகுபடி விபரம் "டேப்லெட்'டில் பதிவு

திண்டுக்கல்:விவசாய துறையில் உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க, 2078 உதவி வேளாண் அலுவலர்கள் களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பயிர்களின் சாகுபடி விபரங்கள் உடனுக்குடன் "டேப்லெட்'டில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.விவசாய துறையில், "இரண்டு மடங்கு உற்பத்தி, முன்றுமடங்கு வருமானம்' என்ற குறிக்கோளுடன் அரசு செயல்படுகிறது. தமிழகத்தில் உணவு தானிய உற்பத்தி 110 மெ., டன்னை எட்டியதை பாராட்டி
மத்திய அரசு கிர்ஷிகர் மன் விருதும், ரூ.2 கோடி ரொக்கப்பணமும் வழங்கியது.
இந்தாண்டு இலக்காக 145 மெ., டன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாநிலம் முழுவதும் முதற்கட்டமாக ஜன.5 முதல் விவசாயிகளுக்கான நிரந்தர பயண திட்டம் துவங்கியுள்ளது. இதில் ஆயிரக்
கணக்கான அலுவலர்கள் தீவிரம் காட்டியுள்ளனர். திண்டுக்கல் விவசாய இணை இயக்குனர் சம்பத்குமார் கூறியதாவது: விவசாய உதவி அலுவலர்கள் தங்கள் பகுதி விவசாயிகளை சந்தித்து சாகுபடி குறைபாடுகளை கேட்டறிய வேண்டும். அதிலுள்ள பிரச்னைகளை, "டேப்லெட்'டிலுள்ள எப்.சி.எம்.எஸ்., மென்பொருள் உதவியுடன், வேளாண் இயக்குனரகம், மற்றும் காந்திகிராம பல்கலை வேளாண் அறிவியல் மையம், வேளாண் பல்கலைகழகங்களுக்கு அனுப்பி வைப்பர். இதன்மூலம் ஆராய்ச்சியாளர், உயரதிகாரிகள் ஆலோசனை பெற்று சாகுபடி பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். இதனால் உணவு உற்பத்தியில் விரைவாக தன்னிறைவு பெற முடியும். இதற்காக தமிழகம் முழுவதும் விவசாய துறையில் 379யூனியன்கள், தோட்டக் கலைத்துறையில் கொடைக்கானல், ஊட்டி, விழுப்
புரம், வெள்ளிமலை என 6 பகுதிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இப்பணியில் 2078 உதவி வேளாண் அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர்.இப்பணியிடங்களில் 360 காலியிடங்கள் உள்ளதால் அதை சமாளிக்க, தோட்டக்கலை துறையிலிருந்து 275 உதவி வேளாண் அலுவலர்களும், அட்மா திட்டத்தில் 85 அலுவலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.'' என்றார்.

No comments:

Post a Comment