Saturday, 10 January 2015

ஜூடோ போட்டி ஈரோடு, சேலம் கல்லூரி சாம்பியன்


 













ஒட்டன்சத்திரம், : அண்ணா பல்கலை கழக மண்டலங்களுக்கு இடையே நடைபெற்ற ஜூடோ போட்டியில் ஈரோடு, சேலம் கல்லூரிகள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
 ஒட்டன்சத்திரம் கிறிஸ்தவ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கு இடையே ஜூடோ போட்டி நடைபெற்றது. இதில் 18 பொறியியல் கல்லூரிகள் கலந்து கொண் டன.
அண்ணா பல்கலைக் கழக விளையாட்டு கழக துணை இயக்குனர் பாலகுமாரன் போட்டியை துவக்கி வைத்தார்.
ஆண்கள் 90 கிலோ எடைப் பிரிவில் கே.எல்.என் கல்லூரி அருண்பிரசாத் முதல் இடத்தை பிடித்தார். கிறிஸ்தவ பொறியியல் கல்லூரி மாணவர் அரவிந்த் இரண்டாவது இடத்தையும், 56 கிலோ எடைப்பிரிவில் ஈரோடு வெள்ளா ளர் பொறியியல் கல்லூரி பாலகிருஷ்ணன் முதல் இடத்தையும், திண்டிவனம் மயிலம் பொறியியல் கல்லூரி சேக்ஜபீர் செரீப் இரண்டாவது இடத்தையும், கிறிஸ்தவ பொறியல் கல்லூரி மாணவர் வீரமுத்து மூன்றாவது இடத்தையும், பெண்கள் பிரிவில் நிசாந்தி,வசந்தி,கஸ்தூரி வேறுபட்ட எடைப்பிரிவுகளில் இரண்டாவது இடத்தை பிடித்தனர்.
மேலும் இக்கல்லூரியை சேர்ந்த திவ்யா மற்றும் அனிதா முதலிடத்தினை பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
போட்டியின் ஒட்டு மொத்த சாம்பியன் பட்ட த்தை ஈரோடு வெள்ளாளர் பொறியியல் கல்லூரியும், சேலம் சோனா பொறியியல் கல்லூரியும் பகிர்ந்து கொண்டன.
பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு கிறிஸ்தவ பொறியியல் கல்லூரியின் முதல்வர் கெசிசெல்வவிசிலா முன்னிலை வகித்து வெற்றிபெற்ற அணியினருக்கு சாம்பியன் கோப்பையை வழங்கினார்.

No comments:

Post a Comment