Saturday, 10 January 2015

கல் குவாரியில் டிராக்டர் பறிமுதல்

ரெட்டியார்சத்திரம்:ரெட்டியார்சத்திரம் கே.புதுக்கோட்டையில் உள்ள ஒருகுவாரியில் அனுமதி காலம் கடந்தாண்டு ஆகஸ்டில் முடிந்தது. தொடர்ந்து செயல்பட்டதால் அதிகாரிகளுக்கு அடுத்தடுத்து புகார் சென்றது. அவர்களின் எச்சரிக்கைக்கு பின்பும் தொடர்ந்து செயல்பட்டது. நேற்று திண்டுக்கல் ஆர்.டி.ஓ., உத்தமன் தலைமையில், ரெட்டியார்சத்திரம் ஆர்.ஐ., வேல்முருகன், வி.ஏ.ஓ., ரேணுகாதேவி அங்கு சென்றனர். அங்கு பணிகளை நிறுத்திய அவர்கள், டிராக்டரை பறிமுதல் செய்து ரெட்டியார்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.மாவட்ட நிர்வாகம் இப்பகுதி குவாரிகளின் செயல்பாடுகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்

No comments:

Post a Comment