கொடைக்கானல்:கொடைக்கானல் பெருமாள்மலையில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்டத்தின் மூலம் கலாசார கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் நடந்தது.இதில் வென்ற சுயஉதவிக்குழுக்களுக்கு பரிசளிப்பு விழாவுக்கு பி.டி.ஓ., பட்டுராஜன் தலைமை வகித்தார். ஒன்றிய துணைத்தலைவர் ஆர்.ஏ.பொன்னுதுரை முன்னிலை வகித்தார். ஒன்றிய தலைவர் ராதாகிருஷ்ணன் பரிசு வழங்கினார். அடுக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி, சேர்முகராஜன், சுப்ரமணியன், தங்கவேல் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment