Saturday, 10 January 2015

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் குடியரசு தினவிழாவை முன்னிட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் அறிவுரை


திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் குடியரசு தினவிழாவை முன்னிட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ஹரிகரன் பேசினார்.
குடியரசு தினவிழா ஆலோசனை குடியரசு தினவிழா கொண்டாட்டம் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் பற்றிய ஆலோசனை கூட்டம், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் நாகேந்திரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலெக்டர் ஹரிகரன் பேசியதாவது:–
அரசு பஸ் வசதிவருகிற 26–ந்தேதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினவிழா நடக்கிறது. இதையொட்டி, திண்டுக்கல் காமராஜர் பஸ் நிலையத்தில் இருந்து, விழா நடைபெறும் மைதானத்திற்கு சிறப்பு பஸ்களை இயக்க, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த குடியரசு தினவிழாவில் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகள் கவுரவிக்கப்படுகிறார்கள். அதேபோல் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், அரசின் பல்வேறு துறைகள் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட இருக்கின்றன. பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.
போலீஸ் தீவிர கண்காணிப்பு எனவே, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தேவையான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். மேலும் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவி, கலெக்டர் அலுவலக மேலாளர் தாஜுதீன், ஆர்.டி.ஓ. உத்தமன், முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் உள்பட அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
--–
குடியரசு தினவிழா முன்னேற்பாடுகள் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் ஹரிகரன் தலைமையில் நடந்த போது எடுத்தபடம்.

No comments:

Post a Comment