வடமதுரை
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வினோதா தலைமையில் போலீசார் அந்த பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சில கடைகளில் அனுமதியின்றி பெட்ரோல் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பெட்ரோல் விற்பனை செய்ததாக சுக்காம்பட்டியில் காளிச்சாமி (வயது 45), எஸ்.குரும்பபட்டியில் பழனிவேல் (31), கொம்பேறிபட்டியில் காந்தி (55), அக்கலன் (50) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
மேலும் பூசாரிபட்டியில் அனுமதி இல்லாமல் மதுபானம் விற்ற அதே பகுதியை சேர்ந்த கமலாராணி (35) என்ற பெண்ணையும், வேங்கனூரில் புதுப்பட சி.டி.க்களை திருட்டுத்தனமான விற்பனை செய்த சரவணன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வினோதா தலைமையில் போலீசார் அந்த பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சில கடைகளில் அனுமதியின்றி பெட்ரோல் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பெட்ரோல் விற்பனை செய்ததாக சுக்காம்பட்டியில் காளிச்சாமி (வயது 45), எஸ்.குரும்பபட்டியில் பழனிவேல் (31), கொம்பேறிபட்டியில் காந்தி (55), அக்கலன் (50) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
மேலும் பூசாரிபட்டியில் அனுமதி இல்லாமல் மதுபானம் விற்ற அதே பகுதியை சேர்ந்த கமலாராணி (35) என்ற பெண்ணையும், வேங்கனூரில் புதுப்பட சி.டி.க்களை திருட்டுத்தனமான விற்பனை செய்த சரவணன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment