திண்டுக்கல்,
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் பற்றி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் ஹரிகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
பொங்கல் திருநாளுக்கு முந்தைய தினம் போகி பண்டிகை தினத்தில் வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இதர நிறுவனங்களில் வெளியேற்றப்படும் பயன்படாத பிளாஸ்டிக் பொருட்கள், சாக்கு பைகள், தலையணைகள், பாய்கள் உள்ளிட்ட கழிவுகள் எரிக்கப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசு அடைந்து, டையாக்சின் மற்றும் பியூரான் போன்ற அபாய நச்சு எரிவாயுக்கள் வெளிப்பட்டு பொதுமக்களுக்கு புற்றுநோய் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்படும்.

இதை தவிர்க்க நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 14–ந்தேதி வரை பள்ளி, கல்லூரி மாணவர்கள், பேரூராட்சி பணியாளர்கள் மூலம் விழிப்புணர்வு பேரணி நடக்க இருக்கிறது. மேலும் துப்புரவு பணியாளர்கள், சுயஉதவிக்குழுவினரை கொண்டு ஒருங்கிணைந்த துப்புரவு பணி முகாம்கள் நடைபெற இருக்கின்றன. இந்த முகாம் நடைபெறும் நாட்களில் நேரில் வந்து கழிவுகளை வாங்கி புகையில்லாத பொங்கல் நாளாக உருவாக்க உள்ளனர். இதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் பற்றி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் ஹரிகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
பொங்கல் திருநாளுக்கு முந்தைய தினம் போகி பண்டிகை தினத்தில் வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இதர நிறுவனங்களில் வெளியேற்றப்படும் பயன்படாத பிளாஸ்டிக் பொருட்கள், சாக்கு பைகள், தலையணைகள், பாய்கள் உள்ளிட்ட கழிவுகள் எரிக்கப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசு அடைந்து, டையாக்சின் மற்றும் பியூரான் போன்ற அபாய நச்சு எரிவாயுக்கள் வெளிப்பட்டு பொதுமக்களுக்கு புற்றுநோய் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்படும்.
இதை தவிர்க்க நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 14–ந்தேதி வரை பள்ளி, கல்லூரி மாணவர்கள், பேரூராட்சி பணியாளர்கள் மூலம் விழிப்புணர்வு பேரணி நடக்க இருக்கிறது. மேலும் துப்புரவு பணியாளர்கள், சுயஉதவிக்குழுவினரை கொண்டு ஒருங்கிணைந்த துப்புரவு பணி முகாம்கள் நடைபெற இருக்கின்றன. இந்த முகாம் நடைபெறும் நாட்களில் நேரில் வந்து கழிவுகளை வாங்கி புகையில்லாத பொங்கல் நாளாக உருவாக்க உள்ளனர். இதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment