Saturday, 10 January 2015

விளையாட்டு துறையில் திறமையை வெளிப்படுத்தினால் வேலை வாய்ப்பில் முன்னுரிமை கலெக்டர் அறிவுரை

திண்டுக்கல், : மாணவர்கள் கல்வியுடன் விளை யாட்டு துறையிலும் திறமை களை வெளிப்படுத்த வேண் டும். இதன்மூலம் வேலைவாய்ப்பில் முன்னு ரிமை பெறலாம் என்று கலெக்டர் ஹரிஹரன் தெரிவித்துள் ளார். திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி நிறைவுவிழா நடைபெற்றது. கலெக்டர் ஹரிஹரன் தலை மை வகிக்க, எம்பி உதயக்குமார், மேயர் மருதராஜ் ஆகியோர் முன்னிலை  கித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கி கலெக்டர் பேசியதாவது: கிராமப்புர விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பங்கு பெற வை க்க வேண்டும் என்ற நோக்கில் இப்போட்டிகள் நடத்தப்படுகிறது. இதற்காக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
மாணவர்கள் கல்வியு டன் விளையாட்டு துறையி லும் திறமைகளை வெளிப்படு த்த வேண்டும்.
இதன் மூலம் வேலைவாய்ப்பில் முன்னு ரிமை பெறலாம் என்றார். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சவுந்திரராஜன் உட்பட பலர் கலந்து கொண் டனர்.

No comments:

Post a Comment