Saturday, 10 January 2015

பத்திரிகை படிக்க ஆலோசகர் அறிவுரை

பழநி: பழநி சுப்ரமண்யா பொறியியல் கல்லூரியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி தலைவர் ஜனார்த்தனன் தலைமைவகித்தார். முதல்வர் சரவணன் முன்னிலைவகித்தார். இதில் கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசியதாவது: இன்று எல்லாத் துறைகளிலும் வேலைவாய்ப்பு அதிகமாக உள்ளன. கண்பார்வையில்லாத பெண் ஐ.ஏ.எஸ்., படித்து சாதனை படைக்கும்போது, நம்மால் ஏன் முடியாது. மாணவர்கள் முழுமுயற்சிசெய்தால் சாதிக்க முடியும். பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் கலந்தாய்வுக்கு செல்லும் முன், அங்குசென்று துறைகளை தேர்வுசெய்வது எப்படி என முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். தினமும் பத்திரிகை படித்தால், எந்த துறையில் வேலைவாய்ப்புகள் உள்ளன என அறியலாம், என்றார்.

No comments:

Post a Comment