Saturday, 10 January 2015

கொடைக்கானல் பகுதியில் தொடர்மழை எதிரொலி: பழனி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

                 



கொடைக்கானல் பகுதியில் தொடர்மழை எதிரொலியாக பழனியில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அணைகளுக்கு நீர் வரத்து திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வரத்து கால்வாய்களில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பழனி பாலாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
அணையின் மொத்த உயரமான 65 அடியில் தற்போது 58.07 அடி வரை தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 28 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 110 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதே போல் வரதமாநதி அணையின் மொத்த உயரமான 66.47 அடியில், தற்போது 57.58 அடிவரை தண்ணீர் உள்ளது. வினாடிக்கு 54 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி அணையில் இருந்து வினாடிக்கு 10 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. குதிரையாறு அணையின் மொத்த உயரமான 79.99 அடியில் தற்போது 67.88 அடியாக உள்ளது. வினாடிக்கு 3 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 20 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
நங்காஞ்சியாறு அணையின் மொத்த உயரமான 40 அடியில் தற்போது 19.75 அடிவரை தண்ணீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லாததால் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படவில்லை.
பழனி நகரின் குடிநீர் தேவை மற்றும் விவசாய பாசனத்திற்காக தொடர்ந்து அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகின்றன. இதனால் பழனி மற்றும் சுற்று வட்டார கிராமப்புறங்களில் வசிக்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment