திண்டுக்கல் அருகே நான்கு வழிச்சாலையில், கான்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

4 வழிச்சாலை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்ட பிறகு, சாலை போக்குவரத்தில் ஒரு புரட்சி ஏற்பட்டது என்று சொல்லலாம். வாகனங்களின் வேகம் அதிகரித்து, பயண நேரம் கணிசமாக குறைந்திருக்கிறது என்பதை பாராட்டாமல் இருக்க முடியாது. பொதுமக்களுக்கு வரப்பிரசாதமாக இந்த நான்கு வழிச்சாலை அமைந்திருக்கிறது.
தமிழகத்தில் அதிக அளவு 4 வழிச்சாலையை கொண்ட மாவட்டங்களில் திண்டுக்கல் மாவட்டமும் ஒன்றாகும். திண்டுக்கல்லில் இருந்து திருச்சி, சேலம், மதுரை ஆகிய இடங்களுக்கு நான்கு வழிச்சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில், மின்னல் வேகத்தில் வாகனங்கள் சென்று வருகின்றன. அதேநேரத்தில் அவ்வப்போது சிறிய, பெரிய விபத்துகளும் நடந்து வருகிறது.
வெளியே தெரியும் கம்பிகள் எந்தவொரு சாலையாக இருந்தாலும் பராமரிப்பு என்பது அவசியம். இல்லையெனில் அவை பொதுமக்களுக்கு பயன் இல்லாமல் போய் விடும். அப்படியொரு நிலைமை, திண்டுக்கல்–திருச்சி நான்கு வழிச்சாலைக்கு ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இந்த சாலையில் கலெக்டர் அலுவலகம் அருகே, அஞ்சலி ரவுண்டானாவில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. அதன் மேல்பகுதியில் உள்ள சாலை பராமரிப்பு இன்றி பரிதாபமாக காட்சி அளிக்கிறது.
சாலையின் மையப்பகுதியில் போடப்பட்டுள்ள கான்கிரீட் பெயர்ந்து போய் இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதன் காரணமாக, அந்த சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
விபத்து அபாயம் அத்துடன் விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது சிறிய விபத்துகள் அரங்கேறி கொண்டிருக்கின்றன. வேகமாக செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் இறங்கி ஏறுவதால் நிலைதடுமாறி கவிழும் சூழல் நிலவுகிறது.
தற்போது சென்னை, திருச்சியில் இருந்து பழனி மற்றும் கொடைக்கானல் செல்லும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் இந்த சாலையை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். எனவே பெரிய விபத்து ஏற்படும் வரை காத்திருக்காமல், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு நான்கு வழிச்சாலை பராமரிப்பு பணியில் சம்பந்தப்பட்ட துறையினர் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
4 வழிச்சாலை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்ட பிறகு, சாலை போக்குவரத்தில் ஒரு புரட்சி ஏற்பட்டது என்று சொல்லலாம். வாகனங்களின் வேகம் அதிகரித்து, பயண நேரம் கணிசமாக குறைந்திருக்கிறது என்பதை பாராட்டாமல் இருக்க முடியாது. பொதுமக்களுக்கு வரப்பிரசாதமாக இந்த நான்கு வழிச்சாலை அமைந்திருக்கிறது.
தமிழகத்தில் அதிக அளவு 4 வழிச்சாலையை கொண்ட மாவட்டங்களில் திண்டுக்கல் மாவட்டமும் ஒன்றாகும். திண்டுக்கல்லில் இருந்து திருச்சி, சேலம், மதுரை ஆகிய இடங்களுக்கு நான்கு வழிச்சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில், மின்னல் வேகத்தில் வாகனங்கள் சென்று வருகின்றன. அதேநேரத்தில் அவ்வப்போது சிறிய, பெரிய விபத்துகளும் நடந்து வருகிறது.
வெளியே தெரியும் கம்பிகள் எந்தவொரு சாலையாக இருந்தாலும் பராமரிப்பு என்பது அவசியம். இல்லையெனில் அவை பொதுமக்களுக்கு பயன் இல்லாமல் போய் விடும். அப்படியொரு நிலைமை, திண்டுக்கல்–திருச்சி நான்கு வழிச்சாலைக்கு ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இந்த சாலையில் கலெக்டர் அலுவலகம் அருகே, அஞ்சலி ரவுண்டானாவில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. அதன் மேல்பகுதியில் உள்ள சாலை பராமரிப்பு இன்றி பரிதாபமாக காட்சி அளிக்கிறது.
சாலையின் மையப்பகுதியில் போடப்பட்டுள்ள கான்கிரீட் பெயர்ந்து போய் இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதன் காரணமாக, அந்த சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
விபத்து அபாயம் அத்துடன் விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது சிறிய விபத்துகள் அரங்கேறி கொண்டிருக்கின்றன. வேகமாக செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் இறங்கி ஏறுவதால் நிலைதடுமாறி கவிழும் சூழல் நிலவுகிறது.
தற்போது சென்னை, திருச்சியில் இருந்து பழனி மற்றும் கொடைக்கானல் செல்லும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் இந்த சாலையை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். எனவே பெரிய விபத்து ஏற்படும் வரை காத்திருக்காமல், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு நான்கு வழிச்சாலை பராமரிப்பு பணியில் சம்பந்தப்பட்ட துறையினர் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
No comments:
Post a Comment