Sunday, 17 May 2015

ஒட்டன்சத்திரம் பகுதியில் விடிய, விடிய பலத்த மழை வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

        

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால் ஆறு மற்றும் ஓடைகளில் வெள்ளப் பெருககெடுத்து காற்றாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் கிராமங்களில உள்ள வீடுகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. ஒட்டன்சத்திரம் சுற்றுப்புற பகுதிகளான முத்துநாயககன்பட்டி, புலியூர்நத்தம், இடையகோட்டை, கேதையறும்பு, கள்ளிமந்தயம், அத்திககோம்பை, சட்டையப்பனூர், அம்பிளிககை, பெரியகோட்டை உள்ளிட்ட அனைத்து கிராம பகுதிகளிலும் நள்ளிரவு 1 மணி முதல் கனமழை பெய்தது. இதனால் விவசாய நிலங்களில தண்ணீர் தேங்கி உள்ளது. இடையகோட்டை நங்காஞ்சி அணைக்கு முத்துநாயககன்பட்டி, குளிப்பட்டி வழியாக செல்லும் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதேபோல் புலியூர்நத்தம், சட்டையப்பனூர், சாலைப்புது£ர், அத்திககோம்பை ஆகிய பகுதிகளிலும் வீடுகளுககுள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த மககள் இரவில் வீட்டிற்குள் செல்ல முடியாமல் தவித்தனர். பரப்பலாறு அணையில் நேற்று காலை நிலவரப்படி 11.6 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது அதே போல் அணையின் மொத்த கொள்ளளவான 90 அடியில் தற்போது 83.74 அடி தண்ணீர் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக போதிய மழை பெய்யாத நிலையிலும், கடந்த 4 ஆண்டுகளாக கடுமையான வறட்சி நிலவி வந்த நிலையில் இப்போது பெய்துள்ள மழை விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment