Sunday, 17 May 2015

கனமழை: ரோட்டில் குவிந்த செம்மண்ணால் பாதிப்பு

தாண்டிக்குடி, :தாண்டிக்குடி-அரசன்கொடை புறவழிச்சாலைக்கு கொட்டப்பட்ட செம்மண் கனமழையால் மெயின் ரோட்டில் குவிந்து வாகனங்களுக்கு இடையூறானது. தாண்டிக்குடி அருகே அரசன்கொடை புறவழிச்சாலையில் செம்மண் கொட்டப்பட்டுள்ளது. இப்பகுதியில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான ரோடு பகுதியில் கொட்டப்பட்ட செம்மண் அரிக்கப்பட்டு, தாண்டிக்குடி-வத்தலக்குண்டு மெயின் ரோட்டில் குவிந்தது. இப்பகுதி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதில் சிக்கும் வாகனங்கள் தடுமாறி கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்குகின்றன. மெயின் ரோட்டில் குவிந்துள்ள சகதியை அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment