தமிழகம் முழுவதும் முடங்கிய இ-சேவை மையங்கள் மீண்டும் இன்று(மே 17) முதல் இயங்கும் என, அரசு கேபிள்
"டிவி' நிறுவனம் தெரிவித்தது. தமிழகத்தில் 32 கலெக்டர் அலுவலகங்கள், 254 தாலுகா அலுவலகங்களில் இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன. இதில் 18 மையங்கள் "எல்காட்' நிறுவனம் மூலமாகவும், மற்ற மையங்கள் அரசு "கேபிள் டிவி' மூலமாகவும் செயல்படுகின்றன. இம்மையங்களில் வருமானம், ஜாதி, இருப்பிடம், முதல் தலைமுறை பட்டதாரி சான்றுகள் வழங்கப்படுகின்றன. மேலும் பெண் குழந்தை பாதுகாப்பு, திருமண நிதியுதவி போன்ற திட்டங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். சேவைக்கு தகுந்தாற்போல் கட்டணம் வசூலிக்கின்றனர். "சர்வர்' பிரச்னையால் இ-சேவை மையங்கள் ஒருவாரத்திற்கு மேலாக இயங்காமல் முடங்கின. ஜாதி, இருப்பிடம் போன்ற சான்றிதழ்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் விண்ணப்பிக்க முடியாமல் தவித்தனர். தற்போது "சர்வர்' பிரச்னை சரிசெய்யப்பட்டு, இன்று முதல் இ-சேவை மையங்கள் இயங்கும் என, அரசு கேபிள் "டிவி' நிறுவனம் தெரிவித்தது.
"டிவி' நிறுவனம் தெரிவித்தது. தமிழகத்தில் 32 கலெக்டர் அலுவலகங்கள், 254 தாலுகா அலுவலகங்களில் இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன. இதில் 18 மையங்கள் "எல்காட்' நிறுவனம் மூலமாகவும், மற்ற மையங்கள் அரசு "கேபிள் டிவி' மூலமாகவும் செயல்படுகின்றன. இம்மையங்களில் வருமானம், ஜாதி, இருப்பிடம், முதல் தலைமுறை பட்டதாரி சான்றுகள் வழங்கப்படுகின்றன. மேலும் பெண் குழந்தை பாதுகாப்பு, திருமண நிதியுதவி போன்ற திட்டங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். சேவைக்கு தகுந்தாற்போல் கட்டணம் வசூலிக்கின்றனர். "சர்வர்' பிரச்னையால் இ-சேவை மையங்கள் ஒருவாரத்திற்கு மேலாக இயங்காமல் முடங்கின. ஜாதி, இருப்பிடம் போன்ற சான்றிதழ்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் விண்ணப்பிக்க முடியாமல் தவித்தனர். தற்போது "சர்வர்' பிரச்னை சரிசெய்யப்பட்டு, இன்று முதல் இ-சேவை மையங்கள் இயங்கும் என, அரசு கேபிள் "டிவி' நிறுவனம் தெரிவித்தது.
No comments:
Post a Comment