Sunday, 17 May 2015

நத்தத்தில் கருணை கிழங்கு சாகுபடி தீவிரம்

நத்தம், :நத்தம் பகுதியில் கருணை கிழங்கு சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி
வருகின்றனர். நத்தம் சுற்றுவட்டார பகுதிகளான காசம்பட்டி, கவரப்பட்டி, புதுக்கோட்டை, வத்திப்பட்டி, லிங்கவாடி கிராமப் பகுதிகளில் அதிக அளவில் கருணை கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. சாதாரணமாக மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும் கிழங்குகளில் நன்கு முளை விட்டுள்ள விதைகளை தேர்ந்தெடுத்து நடவு செய்யலாம். சொந்த நிலத்தில் விளையும் கிழங்குகளிலும் விதை எடுக்கலாம். நடவு செய்ததிலிருந்து ஏழு முதல் எட்டு மாதங்களில் விளைந்து விடும். இரண்டு வாரங்களில் மூன்று முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பாத்திகளில் அதிகம் தண்ணீர் தேங்கி நிற்காமல் இருந்தால் கிழங்கு அழுகாமல் இருக்கும். கருணை கிழங்கு செடியில் நோய் தாக்குதல் குறைவு. நன்கு பராமரித்தால் ஒரு செடியில் இருந்து அதிக பட்சமாக ஒரு கிலோ வரை விளைச்சல் பெற முடியும்.
இப்பகுதியில் விளையும் கிழங்குகள் மதுரை உள்ளிட்ட மார்க்கெட்டில் விற்கப்படுகிறது. தற்போது வரத்து குறைவால் நல்ல விலை கிடைக்கிறது. விலை கிடைப்பதால் விவிசாயிகள் கருணை கிழங்கு சாகுபடியில் ஆர்வர் காட்டி வருகின்றனர். விவசாயி பழனிச்சாமி கூறியதாவது,""இருபது சென்டில் சாகுபடி செய்துள்ளேன். தற்போது கிலோ ரூ.60 க்கு விற்பனையாகிறது. இதனால் நல்ல லாபம் கிடைக்கிறது. வரத்து கூடுதல் காலங்களில் விலை குறையவும் வாய்ப்புள்ளது'' என கூறினார்.

No comments:

Post a Comment