ஒட்டன்சத்திரம், :மூன்று ரோடுகளின் சந்திப்பு பகுதியான ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட்
பகுதியில் நிழற்கூரை வசதி இல்லாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் பஸ் நிறுத்தமானது, திண்டுக்கல் ரோடு, பழநி ரோடு மற்றும் வேடசந்தூர் ரோடு ஆகியவை சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இதனை சுற்றி அண்ணாநகர், கே.கே.நகர் மற்றும் அத்திக்கோம்பை ஊராட்சிகள் அமைந்துள்ளன. வேலை நிமித்தம் காரணமாக தினந்தோறும் ஏராளமான பயணிகள் இங்கிருந்து வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். இப்பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்ட பின்னர் பல பஸ்ஸ்டாப்புகள் காணாமல் போயின. இதனால் திண்டுக்கல், மதுரை செல்லும் பயணிகள் ஆபத்தான இடத்தில் நின்று பஸ்களில் ஏறிச் செல்கின்றனர். இதே போல் பழநி மார்க்கமாக செல்வதற்கான பஸ்ஸ்டாப்பும் எது என்று தெரியவில்லை. இதனால் பயணிகளைப் போலவே, பஸ் டிரைவர்களும் குழப்பமடைந்து நினைத்த இடத்தில் பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கி விடுகின்றனர்.
நிழற்கூரை இல்லாததால் மழை மற்றும் வெயில் காலங்களில் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இப்பகுதியில் நிரந்தரமான பஸ்ஸ்டாப்பை நிழற்கூரை வசதியுடன் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பு.
பகுதியில் நிழற்கூரை வசதி இல்லாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் பஸ் நிறுத்தமானது, திண்டுக்கல் ரோடு, பழநி ரோடு மற்றும் வேடசந்தூர் ரோடு ஆகியவை சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இதனை சுற்றி அண்ணாநகர், கே.கே.நகர் மற்றும் அத்திக்கோம்பை ஊராட்சிகள் அமைந்துள்ளன. வேலை நிமித்தம் காரணமாக தினந்தோறும் ஏராளமான பயணிகள் இங்கிருந்து வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். இப்பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்ட பின்னர் பல பஸ்ஸ்டாப்புகள் காணாமல் போயின. இதனால் திண்டுக்கல், மதுரை செல்லும் பயணிகள் ஆபத்தான இடத்தில் நின்று பஸ்களில் ஏறிச் செல்கின்றனர். இதே போல் பழநி மார்க்கமாக செல்வதற்கான பஸ்ஸ்டாப்பும் எது என்று தெரியவில்லை. இதனால் பயணிகளைப் போலவே, பஸ் டிரைவர்களும் குழப்பமடைந்து நினைத்த இடத்தில் பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கி விடுகின்றனர்.
நிழற்கூரை இல்லாததால் மழை மற்றும் வெயில் காலங்களில் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இப்பகுதியில் நிரந்தரமான பஸ்ஸ்டாப்பை நிழற்கூரை வசதியுடன் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பு.
No comments:
Post a Comment