Tuesday, 4 August 2015

ஆதார் புகைப்படம் எடுக்கும் பணி நிறுத்தம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி தற்காலிகமாக ஆக., 5 முதல் நிறுத்தி வைக்கப்படுகிறது.கலெக்டர் ஹரிஹரன் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி 2014 நவ.,1 முதல்
நடக்கிறது. இப்பணி கலெக்டர் அலுவலகம், தாலுகா, மாநகராட்சி, நகராட்சி அலுவலக நிரந்தர
மையங்களில் நடக்கின்றன. இந்த பணி தற்காலிகமாக ஆக., 5 முதல் ஆக., 14 வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த நாட்களில் புகைப்படம் எடுக்க "டோக்கன்' பெற்றோருக்கு பின்பு தேதி அறிவிக்கப்படும். முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் ஆக., 5 முதல் ஆக., 14 வரை நடக்கிறது. இந்த பணி சமுதாய கூடங்கள், அரசு பள்ளிகளில் நடக்கும், என்றார்.

No comments:

Post a Comment