சின்னாளபட்டி,
திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராமம் கஸ்தூரிபா மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் பெண்ணுக்கு 3 குழந்தைகள் பிறந்தன.

ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்தேனி மாவட்டம், கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் ரகுநாதன். இவருடைய மனைவி பிரேமா. கர்ப்பிணியான இவர் திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராமம் கஸ்தூரிபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை பரிசோதனை செய்த போது, கருப்பையில் 3 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.
இந்தநிலையில் அவருக்கு நேற்று சுகப்பிரசவத்தில் 2 ஆண், ஒரு பெண் ஆகிய 3 குழந்தைகளும் பிறந்தன.
5 கிலோ எடையில் பிறந்த குழந்தை இதேபோல் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மனைவி சரண்யா (வயது 25). கர்ப்பிணியான இவரும் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக காந்திகிராமம் கஸ்தூரிபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வயிற்றில் குழந்தையின் எடை அதிகமாக இருப்பதாகவும், எனவே அறுவை சிகிச்சை மூலமே குழந்தையை பெற்றெடுக்க முடியும் என்றும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. முதல் பிரசவத்திலேயே அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தை 5 கிலோ எடை இருந்தது. தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர்.
மேற்கண்ட தகவலை கஸ்தூரிபா மருத்துவமனை ஆலோசகர் டாக்டர் கவுசல்யாதேவி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராமம் கஸ்தூரிபா மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் பெண்ணுக்கு 3 குழந்தைகள் பிறந்தன.
ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்தேனி மாவட்டம், கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் ரகுநாதன். இவருடைய மனைவி பிரேமா. கர்ப்பிணியான இவர் திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராமம் கஸ்தூரிபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை பரிசோதனை செய்த போது, கருப்பையில் 3 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.
இந்தநிலையில் அவருக்கு நேற்று சுகப்பிரசவத்தில் 2 ஆண், ஒரு பெண் ஆகிய 3 குழந்தைகளும் பிறந்தன.
5 கிலோ எடையில் பிறந்த குழந்தை இதேபோல் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மனைவி சரண்யா (வயது 25). கர்ப்பிணியான இவரும் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக காந்திகிராமம் கஸ்தூரிபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வயிற்றில் குழந்தையின் எடை அதிகமாக இருப்பதாகவும், எனவே அறுவை சிகிச்சை மூலமே குழந்தையை பெற்றெடுக்க முடியும் என்றும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. முதல் பிரசவத்திலேயே அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தை 5 கிலோ எடை இருந்தது. தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர்.
மேற்கண்ட தகவலை கஸ்தூரிபா மருத்துவமனை ஆலோசகர் டாக்டர் கவுசல்யாதேவி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment