Tuesday, 4 August 2015

திண்டுக்கல் மாவட்டத்தில் பாலூட்டும் அறைகள் திறப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் மாநகராட்சி சார்பில், பாலூட்டும் அறை துவக்கப்பட்டது. திண்டுக்கல் பஸ்ஸ்டாண்டில் பாலூட்டும் அறையை மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் துவக்கினார். மேயர் மருதராஜ், முன்னிலை வகித்தார். நலப்பணிகள் இணை இயக்குனர் ரவிக்கலா, சுகாதார துணை இயக்குனர் சவுடம்மாள், மருத்துவ அதிகாரிகள் பங்கேற்றனர். மேயர் மருதராஜ் கூறுகையில், "தாய்ப்பாலூட்டும் அறையில் பாத்ரூம், குறைந்தபட்சம் ஐந்து சேர்கள், குப்பைத்தொட்டி, கைகழுவும் வசதி, பேன் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது, என்றார்.

பழநியில் நடந்த நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் (பொ) காளிமுத்து, வேணுகோபாலு எம்.எல்.ஏ., மற்றும் நகராட்சி தலைமைபொறியாளர் செந்தில்குமார் பங்கேற்றனர். ஒட்டன்சத்திரத்தில் நகராட்சி தலைவர் பழனியம்மாள், கமிஷனர் சவுந்திரராஜன், அ.தி.மு.க., தொகுதி செயலாளர் பாலசுப்பிரமணி, நகர செயலாளர் <<உதயம்ராமசாமி பங்கேற்றனர்.
கொடைக்கானலில் நகர் மன்ற தலைவர் ஸ்ரீதர் திறந்து வைத்தார். அ.தி.மு.க., நகர செயலாளர் ஜான் தாமஸ், ஒன்றிய துணைத்தலைவர் பொன்னுத்துரை கலந்து கொண்டனர்.
சின்னாளப்பட்டி: தமிழகத்தில் பாலூட்டும் அறைகளை வீடியோ கான்பரன்ஸ் முறையில் சென்னையில் இருந்து முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

அதற்குமுன்பாக, சின்னாளபட்டி பஸ் ஸ்டாண்டில் அறையை, காலை 10.30 மணிக்கு பேரூராட்சி தலைவர் முருகன் திறந்து வைத்தார். முதல்வர் துவக்கும் முன்பே அவர் திறந்து விட்டதாக, சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சின்னாளபட்டி பேரூராட்சி தலைவர் முருகன் கூறும்போது,"" பொது சுகாதார துறையினர் 20க்கும் மேற்பட்ட பாலூட்டும் பெண்களை நிகழ்ச்சிக்காக வரவழைத்து விட்டனர். அவர்களை நீண்டநேரம் காக்க வைக்க இயலாது என வட்டார மருத்துவ அதிகாரி அவசரப்படுத்தியதால் கத்தரித்து திறப்பு விழா செய்யப்பட்டது,'' என்றார்.

No comments:

Post a Comment